Monday, September 28, 2015

ராயல் சல்யூட் சார் திரு. சகாயம் I.A.S ., இந்திய ஆட்சி பணி

நேதாஜியும், காந்திஜியும்
நேரில் காணக் கிடைக்கவில்லை!
பகத்சிங்கும், கட்டபொம்மனும்
பார்த்தறிய வாய்க்கவில்லை!
வரலாற்றில் படித்ததும்
வாய்வழியாய்க் கேட்டதும்
உண்மையானது உன்னால்!
நீதிக்கும் நேர்மைக்கும் பொருள்
தந்த எங்கள் நாயகனே!
உண்மையே உனக்குப் பின்னால்!!
ஐ.ஏ.எஸ். படித்தவர்கள்
அரசியல்வாதிகளின் கைப்பாவை
எனும் கூற்று பொய்யானது!
ஆளுமை இருந்தால் அவர்களை
ஆட்டுவிக்கலாம் எனும் கூற்று
உம்மால் மெய்யானது!!
நேர்மைக்கு இலக்கணம் என
நெஞ்சம் சொல்லவில்லை!
நேர்மையே உன்னைப் பார்த்து
நடுங்கிப் போயிருக்கிறது!!
படம் நடிக்காமலும்,
பஞ்ச் டயலாக் பேசாமலும்
பின்னால் வரக்காத்திருக்கிறது
பெருங்கூட்டம்!
மேடை போடாமலும், பிரியாணி
பொட்டலம் வாங்காமலும்
கோஷம் போடக்காத்திருக்கிறது
ஒரு கூட்டம்!
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை! அச்சமில்லை!!
அச்சமென்பதில்லையே!!!
வாசித்துச்சென்றான் பாரதி!
நீரோ ஆளும் வர்க்கத்தை
எதிர்த்து நின்று
வாழ்ந்தே காட்டிவிட்டீர்!!
தம் மக்களுக்காய் பொருள்
சேர்க்கும் அதிகாரிகள் மத்தியில்!
எம் மக்களுக்காய் போராட
புறப்பட்டீரோ!!
பெரியாரின் வெங்காயம்
பகுத்தறிவை விதைத்து!
"சகாயம்" எனும் சொல் இங்கே
சாமான்யனைப் புடைத்தது!!
கலாம் கண்ட கனவு இந்தியா
நாளை உம்மால் மலரட்டும்!
இளைஞர் சமுதாய இரவும்
நாளை உம்மால் புலரட்டும்!!
--------------------------------------------------
மேன்மை தாங்கிய திரு. சகாயம் I AS அவர்களுக்குவாழ்த்துகளுடன்
-நம் எண்ணங்கள் குழு . ..


Saturday, September 12, 2015

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..!


சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.
தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.
நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

Thursday, September 10, 2015

அதிகப்படியான உடல்பருமன் உங்கள் வாழ்நாளைக் குறைக்கலாம்



சோம்பேறித்தனம், இயந்திர வாழ்க்கை, அளவுக்கதிகமான ஓய்வு, உடல் ஆற்றலை பயன்படுத்தாத விளையாட்டுக்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்ற இக்கால வாழ்க்கை முறையால் பலரின் உடலின் எடை அளவுகதிகமாகவும், அதிக உடல்பருமனுடனும் இருக்கிறார்கள். இப்படி உடல்பருமன் அளவுக்கதிகமாக இருக்கும்போது உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் அதைக் குறைக்க போதுமான வழிகளைக் கையாள்வதில் சிரமம் கொள்ளத் தயங்குகிறோம். 

இப்படி அதிக உடல்பருமனுடன் இருப்பதால் நமது ஆயுட்காலம்கூட குறைய வாய்ப்புள்ளது என்ற தற்போதைய ஆய்வு முடிவுகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழக உடல்நல மையம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு நிரிழிவு நோய் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வெகுவிரைவாக வரும் வாய்ப்புகள் உள்ளது 
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.Ads By BoostIt.caசர்வதேச உடல்நல மற்றும் ஊட்டச்சத்து அமைப்புநடத்திய கணக்கெடுப்பில், ஒரு ஆண்டின் முடிவில் எத்தனை பேருக்கு நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது போன்ற மாதிரியினை உருவாக்கினர். 

இதில் வித்தியாசமான உடல் பருமன் கொண்ட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர். இதில்தான் அந்த அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்தது, அதிக உடல் பருமன் உள்ளவர்களின் ஆயுட்காலம் சாதாரணஆயுட்காலத்தினைவிட எட்டு ஆண்டுகள் பின்தங்கியிருந்ததுதான் அது. அதாவது அதிக உடல் பருமனுடன் இருந்தால் குறித்த காலத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாம் இறக்க நேரிடும். ஒருவரின் சராசரி உடல் எடை அடர்த்தி 18.5 முதல் 25 வரை இருந்தால் அவரின் உடல் நல்ல ஆரோக்கியமுடன் இருப்பதாக அர்த்தம். ஆனால், இதைவிட அதிக எடை கொண்டவர்களுக்கான ஆயுட்கால இழப்பு, சரியான உடல் எடையுடன் இருப்பவர்களைக் காட்டிலும் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக இழக்கப்படும். 

வயதிற்கு தகுந்தாற்போல் உடலின் உயரம் மற்றும் எடை சரியாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு. இன்னும் தெளிவாகக் கூறினால் இளம்வயதில் நம்உடல் எடையில் கவனம் செலுத்தாவிட்டால், வயதாகும்போது அதன் பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும். அத்துடன் இப்படி உடல் பருமன் அளவுக்கதிகமாக இருப்பது, புகைப்பிடிக்கும் பழக்கத்தினைவிடக் கொடியதுஎன்பதை மறவாதீர்கள்.

Tuesday, September 8, 2015

சாம்பிராணி போடுவது ஏன்?;

சாம்பிராணி என்பது ஒரு மரப்பிசின் ஆகும்.அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் அனைத்துசடங்களிலும் மற்றும் வழிபாடுகளிலும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.
சாம்பிராணி போடுவது , ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி 
நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே.
போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களான செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் மாலைவேளையில்,குளித்துவிட்டு தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து,சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் கிடைக்கும்.செல்வம் பெருகும்.

Monday, September 7, 2015

செய்வன திருந்தச் செய் !....


.சுத்தம் சுகம் தரும் .அதுபோல் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் மிகுந்த அவதானம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் எங்கள் சிந்தனை ஓர் நிலையான இடத்தில் நிற்க வேண்டும் புகழுக்காகவோ அல்லது பிறரை இழிவு படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கங்களுடனோ நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. காரணம் எமது வாழ்க்கை என்பது ஒரு நல்ல சமூகத்துடன் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும் எனில் பிறர் மதிக்கத் தக்க வகையில் எம் பண்பு இருக்க வேண்டும் எந்த ஒரு மனிதனும் ஒருவருடன் பழக நினைக்கும் போதே அவரதுபண்பு குறித்த கேள்விக்குறிகள் அவசியம் எழும்.எழ வேண்டும். அவ்வாறு இல்லையேல் காலப்போக்கில்இவர்கள்தான் எம்முடன் இத்தனை காலமும் நட்புப் பாராட்டி வந்தவர்கள் 
இவர்களது செயல் நாம் எதிர் பார்க்கும் இடத்தில் இல்லை என்று தெரிய வந்தால் அதை விடவும் துன்பம் வேறு இல்லை எனலாம். நல்லவர்களாக வாழ்பவர்கள் கிடைத்தல் என்பது நாம் செய்த புண்ணியம். அதே போன்று தீய ஒழுக்கம் உடையவர்களின் நட்பு கிடைத்துவிட்டால் காலனும் நம் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஒரு கட்டத்தில் நாமே காலனை அழைக்க நேரிடும் அதனிலும் இன்றைய கால கட்டங்களில் மனிதன் எதைச்சிந்திக்கின்றான் அவன் மனம் எம்மிடம் இருந்து எதை எதிர் பார்க்கின்றது ,அடுத்த கட்டமாக அவன் எமக்கு என்ன செய்வான் என்பனவற்றைக் கூட எம்மால் அறிய முடிவதில்லை. அவ்வளவு தூரம் நம்பிக்கைத் துரோகத்தில் மனித இனம் மிக மிக முன்னேறி விட்டதென்றே கருத முடிகிறது.இதனால்தான் எங்கு பார்த்தாலும் சினிமாவிலோ அல்லது தொலைக் காட்சி நாடகங்களிலோ அல்லது பிற செய்தித் தளங்களிலோ வரும் செய்திகள் தகவல்கள் எல்லாமே பார்த்து எம்மால்யீரணிக்க முடிவதில்லை .ஏன் இவைகள்தான் இன்று எம் அன்றாடவாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன !....

மகிழ்ச்சிப் பூக்கள் பூக்க வேண்டும் என்றே மனிதன் பிற உறவுகளைத் தேடி அடைகின்றான் அங்கே கண்ணீர்ப் பூக்களைக் கலக்க விடாமல் இருக்க எமக்கு மிகுந்த கவனம் தேவை என்பதில் நாமேதான் உறுதியாக இருக்க வேண்டும் பிறர் பேச்சைக் கேட்டு அவர்களை நல்லவர்கள் என்ற முடிவுக்கு நாம் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது .எமது ஒவ்வொரு செயலுக்கும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விளக்கம் கேட்பதோ அல்லது விளங்கப்படுத்துவதோ கூடவே கூடாது .சில சமயம் உங்கள் நண்பர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம் அவ்வாறன சமயங்களில் பொறுமை காப்பதோ அல்லது மறை முகமாக மன்னித்து விடுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் 

.காரணம் நட்புக்கிடையில் ஒளிவு மறவு தேவை இல்லை .மிகப் பெரிய குற்றங்கள் செய்தவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செயலை அவதானித்து மெதுவாக நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் மற்றபடி சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் தெளிவு படுத்தி வாழப் பழகுங்கள் .அதை விட்டு விட்டு இவ்வளவு காலமும் நண்பர்களாக வாழ்ந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருந்து விடாதீர்கள் . இந்தவிட்டுக்கொடுப்புகளை தவறாக ஒருவர் புரிந்துகொண்டால் இதை விடவும் பெரும் தவறுகளைசெய்து விட்டு அவர்களும் ஒரு நேரத்தில் உங்களுக்கு துரோகிகளாக மாறலாம் .எதற்கும் முன்னெச்சரிக்கையாக உங்கள் நண்பர்களின் விபரங்களை உங்கள் வீடில் உள்ள பெரியவர்களுடன் ஓர் அறிமுகம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் நட்பு ஆரோக்கியமானதா, அவர்கள் நல்லவர்கள்தானா, யாருடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்ற பெரியவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கிட்டும். அவை உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . ஒளிவு மறைவு அற்ற நட்பே உகந்தது 

இக் காலத்திற்கு என அனைவரும் உணர வேண்டும். நண்பர்களின் தொகைகளை விடவும் நட்புப் புனிதமானது அதை மதிக்கும் ஒருவரே எமக்கு நண்பராக வர வேண்டும் என்ற குறிக்கோள் இங்கு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இன்றைய என் ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .

Sunday, September 6, 2015

இப்படியும் ஒரு வெறியா !


எண்ணிக் கடக்கும் வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும் பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே இத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது.பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது .நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்டும் .பணம் படைத்தவனுக்கோ பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் தவிர தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .பண வெறி என்பது பொதுவாக மனிதர்களுக்குள் உள்ள குணாதிசயங்களில் ஒன்றாகும் .இது எந்த அளவிற்கு மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு மன பாதிப்புக்களையும் அவலங்களையும் தந்தே தான் தீரும் .தன் தேவைகளுக்கு ஏற்ப செல்வங்களையும் சந்தோசங்களையும் வளர்த்துக் கொள்ளும் மனிதன் மட்டுமே இப் புவியில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்க முடியும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோர்களின் இல்லங்களில் சந்தோசம் நிலைப்பதில்லை மாறாக சங்கடங்கள் தான் நிலைத்திருக்கின்றது.அதிலும் தன் தாய் தந்தையைப் பேணிக் காக்க மறந்தவர்கள் உடன் பிறந்த சொந்தங்களை உதறித் தள்ளியவர்கள் ,சொத்துக்காக அன்றாடம் சண்டையிட்டு பிரிந்து (வாழ்ந்தவர்கள்)வாழ்பவர்கள் இவர்கள் ஒரு போதும் தம் வாழ்நாளில் உண்மையான சந்தோசத்தை அனுபவித்திருக்க முடியாது அனுபவிக்கவும் முடியாது .உண்மையான சந்தோசம் என்பது நல்ல உணர்வுகளில் தான் தங்கி உள்ளது இதை எம்மில் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம் ! கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும்தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே அந்த நல்ல உணர்வுகளைக் கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும் நீண்ட காலம் பகைவர்கள் போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன ?..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ?...காணிச் சண்டையும் வேலிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே ?..இன்று சொந்த நாடும் இல்லை வீடும் இல்லை சுடு காட்டினில் தான் வாழுகின்றோம் இதற்கு முன்னர் எப்போதாவது நாம் இது போன்றதொரு சூழ்நிலை வரும்என்பதை அறிந்திருந்தோமா ?..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின்சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை நாம் என்னவென்று சொல்வது ?...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ?..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி கிட்டுமா?....பிறக்கும் போதே ஒரு தாயின் வயிற்றில் கூடிப் பிறந்த சொந்தங்களே இவ்வாறு மனிதாபிமானம் அற்று நடக்கும் போது பிறரது செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா !! இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா ! ?.......கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதே அற்றுப் போன புரிந்துணர்வுகளும் அன்பும் கண் காணாத தேசத்தில் பிரிந்து வாழும் போது எவ்வாறு தொடர்ந்திருக்கும் ?..!! கேள்விக் குறியாக நிற்கும் எம் மக்களின் வாழ்வில் இழந்த சந்தோசங்களை ஒற்றுமையைக் கட்டி எழுப்ப என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல காலம் உலகில் தோன்றாதா ?...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக் கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ?...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ !!..

லஞ்சம் ஒழியனுமா? . .

 .
நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக பகிருங்கள் ..
இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது
லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார் உடனே உருவாக்கியும் விட்டார்.
ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் சொன்னார்.
இந்த கான்செப்டுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.அவர் இதை யதேச்சையாய் ஐந்தாம் தூண் என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம்சொன்னார்.
அந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த் என்பவருக்கு இந்த ஐடியா பிடித்து போக உடனே அவர் 25,000 நோட்டுகளை அச்சடித்தார்.
அதை வட இந்தியாவெங்கும்வினியோகம் செய்ய நோட்டுகள் பரபரவென மக்களிடையே பரவின அதன் பின் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் கேட்க இதுவரை சுமார் பத்துலட்சம் நோட்டுக்களை அச்சடித்து மக்களிடையே வினியோகித்துள்ளது இந்த அமைப்பு
ரெவென்யு டிபார்ட்மெண்டில் லஞ்சம் கேட்டதால் நடையாய் நடந்து அலுத்த பெண் ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவரிடம் இந்த நோட்டை கொடுத்தார்.உடனேஅந்த அதிகாரி சீட்டை விட்டு எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி இவரிடம் மன்னிப்பு கேட்டு வருடகணக்கில் நகராமல் இருந்த பைலை முடித்து கொடுத்தார்
இந்த நோட்டு இத்தனை பெரிய மாஜிக்கை ஏற்படுத்தும் என அந்த அம்மையார் நம்பவே இல்லை.
ஏன் இந்த நோட்டு வட இந்தியாவில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் இந்த நோட்டை பார்த்தால் முதலில் பயந்துவிடுகிறார்கள் என்கிறது உலகவங்கி.
அடுத்து லஞ்சம் என்பது சட்டபடி தண்டனை கிடைக்கும் குற்றம்.லஞ்சம் கொடுக்க வசதியற்ற மக்கள் இழப்பதற்கு ஏதுமில்லை என்ர நிலையில் இந்த நோட்டை தருகின்றனர்.
அலுவலகங்களில் இப்படி ஏராளமான ஏழை எளிய மக்கள் இந்த நோட்டுக்களை அளித்து வருவதால் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டு சொன்ன வேலையை செய்து தருகின்றனர்
இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கான்செப்ட் தமிழ்நாட்டிலும்கிடைக்கின்றது.
இந்த 9094024005 .(FACT INDIA) கைபேசி எண்ணில் தொடர்புகொண்டாள் இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கிடைக்கும் என நினைக்கிறேன்.
PLEASE SHARE THIS...

Saturday, September 5, 2015

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


10% of the world is going to suffer from diabetes by 2035 !!!!


A shocking new report suggests that one in 10 people globally will have diabetes by 2035. To highlight World Diabetes Day which takes place each year on Nov. 14, the International Diabetes Federation (IDF) released its sixth edition of the Diabetes Atlas. The report estimates how many adults between the ages of 20 to 79 will be affected by the disease in the future. By the end of this year, the IDF estimates that 382 million people will have diabetes around the world, CBS News reported. By 2035, that number will skyrocket to 592 million. For comparison, about 285 million people had the disease just four years ago.
Eighty percent of people with the disease live in low- and middle-income countries, and most of them are between 40 and 59 years old. The organization also said that one person dies from diabetes every six seconds, or about 5.1 million deaths annually. The IDF estimates that the percentage of U.S. residents affected by diabetes will increase to 11.6 by 2035, which will be 29.7 million people.
What is diabetes?
Diabetes is a metabolic disease which is characterised by high blood sugar levels. It can be caused either due to the lack of insulin (type 1 diabetes) or because the body’s cells fail to respond to the insulin produced (type 2 diabetes). There’s another form of diabetes that afflicts pregnant women called gestational diabetes.
Symptoms
In diabetes, the body is unable to absorb glucose which leads to a host of problems. Here are some of the symptoms that could indicate diabetes:
1. Increase in appetite
2. Frequent urination
3. Feeling too thirsty
4. Loss of weight
5. Feeling fatigued all day long
6. Frequent infections
7. Poor wound healing
8. High irritability/Depression
9. Blurred vision
Home remedies for diabetes
Ever wonder if there was something you could do at home to keep your blood sugar levels in check? Well, there is. Here are some of them:
Holy Basil Leaves: Also known as tulsi, leaves of holy basil are packed with antioxidants and essential oils that produce eugenol, methyl eugenol and caryophyllene. Collectively these substances help the pancreatic beta cells (cells that store and release insulin) function properly. This in turn helps increase sensitivity to insulin. An added advantage is that the antioxidants present in the leaves help beat the ill effects of oxidative stress.
Tip: Have two to three tulsi leaves whole, or about one tablespoon full of its juice on an empty stomach to lower the blood sugar levels.
Caring for a diabetic
Diabetes can be treated but can’t be cured. People with diabetes can still live a long and healthy life by making some important changes in their lives. When a family member is diagnosed with the disease your support and care can go a long way in achieving and maintaining their blood glucose control. Your role as a care taker can throw up some unique challenges.
Educate yourself
You can care for your family member only when you know about the disease. So, first and foremost, educate yourself about diabetes. Know as much as you can about the disease. To stay healthy, they have to learn how to monitor and control their blood sugar levels.
Pay attention to their diet
Diabetics need to eat regular meals. They need to have at least three meals every day at about the same times. Hence it is important to follow a healthy meal plan at home. Make healthy diet a lifestyle. Encourage them to eat a variety of foods. Give them a choice of food with less fat, less sugar and less salt. Include high-fibre foods, like vegetables, fruit and whole grain breads and cereals in the menu. Don’t stock up on junk food.
Yoga poses to keep diabetes under control
Pranayam:
Breathing in deeply and breathing out helps oxygenate your blood, and improves circulation. It also calms the mind and gives your rattled nerves some much needed rest.
Steps to do this pose: Sit on a yoga mat on the floor. Fold your legs in either padmasana or sit cross legged. Now straighten your back, keep your chin parallel to the floor, place your hands on your knees with your palms facing upwards and close your eyes. Breath in deep and hold your breath for five counts. Exhale slowly. Repeat this process at least ten times. Once you are done, rub your palms together till they are warm, and place them on your eyes. Now slowly open them and smile.
2. Setubandhasana: This pose not only helps keep one’s blood pressure in control it also helps to relax the mind, improves digestion, relieves the symptoms of menopause in women and stretches the neck and spine.

Friday, September 4, 2015

மனிதனை தெய்வமாக பார்த்த விவேகானந்தர் >>>>


இதுதான் இந்தியா என்று உலகுக்கு எடுத்துக்காட்டிய ஒரு வீர இளைஞனின் நினைவு நாள் இன்று/04.07.14… எதற்கும் அடிபணியாத கம்பீரம்… நேர் கொண்ட பார்வை… நிமிர்ந்து நிற்கும் தலைப்பாகை… படத்தை உற்றுப்பார்த்தாலே உள்ளத்தை ஊடுருவும் தீர்க்கமான கண்களுக்கு சொந்தக்காரரான வீரத்துறவி விவேகானந்தருக்குத்தான் இன்று நினைவு நாள்.. வாழ்ந்தது 39 ஆண்டுகள்! அந்த காலகட்டத்துக்குள் ஒட்டு மொத்த உலகத்தையும் தன் பேச்சால், செயலால் உலுக்கி எடுத்து விட்டார்.
இந்த இளைஞனால் மட்டும் எப்படி முடிந்தது? இளைஞர்களே, உங்களை ஒரு அனுமனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிற என்று பிற்காலத்தில் போதித்த விவேகானந்தர் இளமையிலேயே தனது ஆற்றலை உணர்ந்து கொண்டார்.
1863.. விஞ்ஞானத்தின் புதுமைகள் வராத காலம்! ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு கலாச்சாரமும் பாரம்பரியமும் நலிந்து கிடந்தது. சாதி உணர்வுகள், மோதல்கள் உக்கிரமாக தலை விரித்தாடியது. இது தான் அப்போதைய இந்தியாவின் நிலை. உலகத்தின் நிலை வேறு விதமாக இருந்தது. அதிகார பலத்தால் என் மதம் தான் உயர்ந்தது என்று நிலை நாட்டும் போட்டியில் இஸ்லாம், கிறிஸ்தவ மார்க்கங்கள் மல்லு கட்டி கொண்டிருந்தன. அந்த நேரத்தில் தான் 1863– ஜனவரி 12–ந் தேதி நரேந்திரநாத் தத்தா என்ற பெயரில் இந்த துருவ நட்சத்திரம் கல்கத்தாவில் உதயமானது.
வாழ்க்கை ஒரு போராட்டம் அதில் போராடி பார் என்பார்கள். நரேந்திரனின் வாழ்க்கையும் போராட்டமாகவே இருந்தது. வறுமையும், பசியும் குடும்பத்தை சூழ்ந்து நின்றது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்ற தவிப்புடன் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. ஆனால் நரேந்திரனின் உள்ளம் வேறு விதமாக தவித்தது. ஆன்மீகத்தை என்னவென்று அனுபவித்து பார்க்க வேண்டும்? மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு உள்ளம் விடை தேடியது.vivegaananthar
இந்த கேள்விகளோடு தான் ராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகினார். கடவுளை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று நரேந்திரன் எழுப்பிய கேள்விக்கு ஆமாம் என்று அவர் அளித்த பதில் நரேந்திரணை அதிரவைத்தது. குருவின் பக்குவத்தில், பரீட்சையில் கடவுளை உணர்ந்தார். ஆன்மீகத்தில் லயித்தார். வறுமையில் வாடி கிடக்கும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். தேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும். பாரம்பரியமான கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதலோடு துறவறத்தில் ஈடுபட்டார்.
துறவியான பிறகு அவரது பெயர் விவேகானந்தர் ஆயிற்று. மதம் என்பது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டும் தான் என்பதை மாற்றி பாமர மக்களுக்கு தொண்டு செய்வது தான் என்ற புதுமையான புரட்சியை உருவாக்கினார். மதத்தை வேதாந்தம் என்ற நிலையில் இருந்து நடைமுறை வாழ்க்கை முறையோடு மாற்றினார். இந்தியாவில் பெரும் மக்கள் நிலை, கலாச்சாரங்களை அறிந்து கொள்ள கால்நடையாகவே பாரத தேசத்தை வலம் வந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது மன்னர்களின் அரண்மனையிலும் தங்கினார். ஏழை மக்களின் குடிசைகளிலும் தங்கினார். திருவனந்தபுரம் வழியாக 1892 டிசம்பர் 24–ந் தேதி கன்னியாகுமரி சென்றடைந்த அவர் அன்னை பகவதி அம்மனை தரிசித்தார். வெயில் சுட்டெரித்த பகல் நேரம்…. ஓங்கி எழுந்த கடல் அலையும்… அதன் நடுவே இருந்த பாறையும் அவரை ஈர்த்தது அந்த பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய கடலில் நீந்தி சென்றார்.
தவத்தில் இருந்த விவேகானந்தரின் மனத்திரையில் இந்த உலகிற்கே வழிகாட்டிய பாரத தேசத்தின் பாரம் பரியமும், ஆன்மீக சிறப்புகளும், தற்போது பொலிவிழந்து நிற்கும் காட்சியும் ஒவ்வொன்றாய் விரிந்தது. அதை நினைத்து பூரித்த விவேகானந்தர் இந்த தேசத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல சபதம் ஏற்றார்.
அந்த நேரத்தில் தான் அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாடுக்கு அழைப்பு வந்தது. கையில் காசு இல்லாமல் துறவியாக வலம் வந்த விவேகானந்தரை சென்னை இளைஞர்கள் நிதி திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். நரேந்திரனை தந்தது வங்காளமாக இருக்கலாம். ஆனால் விவேகானந்தரை இந்த உலகுக்கு தந்த பெருமை என்றும் தமிழகத்துக்குத் தான்.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கூட்டப்பட்ட உலக சமய மாநாட்டில் தங்கள் சமயம் தான் உலகிலேயே சிறந்தது என்று பறைசாற்ற அமெரிக்கா துடித்து கொண்டிருந்தது. காவி உடையோடு பரம சாதுவாய் எல்லோரும் எள்ளி நகையாடும் பக்கிரியாய் மாநாட்டு அரங்கில் அமர்ந்திருந்த விவேகானந்தரின் இதயம் அன்னை பராசக்தியை தியானித்தது.
அன்னை பாரதத்தின் தலைவிதியை மாற்ற துடித்தது. சீமான்களே, சீமாட்டிகளே என்று உலக தலைவர்களெல்லாம் வார்த்தை ஜாலத்தால் கவர்ந்தார்கள். விவேகானந்தரின் நேரம் வந்தது… சகோதரிகளே, சகோதரர்களே என்று அவரது உள்ளத்தில் இருந்து ஆத்மாத்தமாக உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையும் அந்த பக்கிரியின் மூலம் பாரத தேசத்தை திரும்பி பார்க்க வைத்தது.vivegaananthar2
எள்ளி நகையாடிய தேசம் அவரை போற்றி புகழ்ந்தது. பல நகரங்களில் இந்திய கலாச்சார பெருமைகளை, ஆன்மீகத்தின் தத்துவங்களை தனது தீர்க்கமான உரையால் மேலை நாடுகளில் பரப்பினார். மேலை நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு திரும்பும் போது விவேகானந்தரிடம் எங்கள் நாட்டு சிறப்புகளை பார்த்து விட்டீர்களா? இப்போது உங்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதும் புன்னகையுடன் ‘இது வரை என் நாடு புனிதமான நாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் என் தேசத்தின் ஒவ்வொரு துகளும் புனிதமானது என்று உணர்கிறேன்’ என்றார்.
இதைவிட நாட்டுப்பற்றுக்கு வேறு என்ன வேண்டும். இந்தியா திரும்பிய போதும் ராமநாதபுரம் மண்ணில் இறங்கியதும் தரையில் விழுந்து பாரத தேசத்தை வணங்கினார் அந்த நவ பாரத சிற்பி. பல நதிகள் கடலில் சங்கமமாவது போல உலகில் இருக்கும் எல்லா மதங்களும் இறைவனை சென்றடையும் மார்க்கங்களே!
உலகில் துன்பப் படுவனுக்காக துயரப்படு பவனுக்காக வாழுங்கள். பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் வாழ்ந்தாலும் செத்தற்கு தான் சமம்! மனிதன் கடவுளுக்காக கோவில் கட்டினான். ஆனால் கடவுள் தனக்காக கட்டிய கோவில் தான் மனித உடல் எனவே மக்களுக்கு சேவை செய்யுங்கள். சுயநலம் என்பதை அறவே ஒழித்து விட்டு சேவை செய்யுங்கள் ‘இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர் சக்கரத்தை கிளப்புவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள்’ நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாக திகழுங்கள் என்று இளைஞர்களை தட்டி எழுப்பிய விவேகானந்தர் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் என கூடும் வரை நில்லாது உழைமின்! என்று அறைகூவல் விடுத்தார்.
விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் தமிழக இளைஞர்கள் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து இருந்தார். இதை அவரது சென்னை சொற்பொழிவுகளில் தெரிந்து கொள்ள முடிகிறது. தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள் நாட்டுக்காக உழைப்பார்கள். உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறேன். அரை குறையாக எனது பணிகளை விட்டு செய்கிறேன். சிங்கம் போல் சீறி எழுந்து என் அருமை இளைஞர்கள் செய்து முடிப்பார்கள் என்று தனது நம்பிக்கையை வெளியிட்ட அந்த வீரத்துறவி இன்று நம்மிடம் இல்லை.
அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளன. சிகாகோ மாநாட்டின் நிறைவில் அவர் கூறும்போது, ‘இந்த மாநாட்டின் துவக்கத்தில் ஒலித்த மணி ஒலி உலகில் உள்ள மத தீவிரவாதத்துக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாக இருக்கட்டும்’ என்று வேண்டுகோள் விடுத்ததை அவரது இந்த நினைவு தினத்தில் இதயத்தில் கொள்வோம். உலகை அன்பால் வெல்வோம்.
காளியிடம் விவேகானந்தர் கேட்ட வரம்
விவேகானந்தர் வீட்டை வறுமை வாட்டி வதைத்தது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். அப்போது அவரது நண்பர்கள் ‘நீ, பரமஹம்சரின் சிஷ்யன் தானே. அவர் கேட்டால் காளி செல்வங்களை அள்ளி கொடுப்பாள். கேட்க சொல்’ என்று வற்புறுத்தினார்கள். விவேகானந்தரும் அப்படியே தனது குருநாதரிடம் சென்று எனது குடும்ப வறுமையை போக்க காளியிடம் பணம் தர சொல்லுங்கள் என்றார். ஆனால் ராமகிருஷ்ணர் ‘பணம் உனக்குத் தானே தேவை. நீயே காளியிடம் போய் கேள் நான் உனக்காக கேட்க முடியாது என்று கூறி விட்டார்.
கோவிலுக்குள் சென்ற விவேகானந்தரோ ‘தாயே, எனக்கு ஞானத்தை கொடு’ என்று மட்டும் கேட்டு திரும்பினார். வெளியே வந்ததும் ராமகிருஷ்ணர் ‘என்ன, காளியிடம் பணம் கேட்டாயா?’ என்று கேட்டார். கேட்க முடியவில்லை ஞானம் தான் கேட்டேன் என்றார். அதை கேட்டதும் மறுபடியும் கோவிலுக்குள் அனுப்பி தேவையானதை கேள் என்றார். அப்போதும் ‘ஞானத்தை கொடு, உன் அருளை கொடு’ என்று மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.


சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகபாதை


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களை"எழுமின் விழிமின்' என்று வீறு கொண்டு எழுச்சியுற அறை கூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.ஒரு துறவி ஆன்மிகப் பணி மட்டுமின்றி தேச உணர்வையும் மக்களுக்கு ஊட்ட முடியும் என்று தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரை இந்திய இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது அவரதுஒப்பற்ற செயலாகும்.

இந்திய நாடு என்றால் ஒரு இருண்ட நாடு, நாகரீகம் அற்ற மனிதர்கள் வாழும் இடம். அவர்களுக்குக் கல்வி அறிவு கிடையாது என்று நினைத்துக் கொண்டு இருந்த ஐரோப்பிய மக்களைத் தனது பேச்சாற்றல் மூலமும், தூய்மையான ஆன்மிக வாழ்க்கை மூலமும் இந்திய நாடு ரிஷிகளும், சித்தர்களும், அவதரித்த புண்ணிய பூமி, அனைத்துக் கலைகளும் தழைத்து ஓங்கி நிற்கும் ஒரு பல்கலைக் கழகம், 

உலக நாகரீகத்தின் முன்னோடியான நாடு என்று அனைவரையும் அறியச் செய்த பெருமை விவேகானந்தரையே சேரும்.இந்தியாவை அன்று ஆட்சி புரிந்த ஆங்கிலேயருக்கு இதயப் பகுதியாக விளங்கிய கொல்கத்தாவில் விசுவநாத தத்தர் புவனேஸ்வரி தேவி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். விசுவநாத தத்தர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற வக்கீல்களில் ஒருவர் ஆவார். 

இவர்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆன்மிகத்தையே தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக வைத்து வந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள்.தனது குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லாமல் சென்று விடுமோ என்று மிகுந்த கவலையுடன் கோவில் கோவிலாகத் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்தார்கள்.இந்த நிலையில் புவனேசுவரி தேவி கர்ப்பமானார். 

1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் நாள் இந்துக்கள் மிகப்புனிதமாகக் கொண்டாடும் மகா சங்கராந்தியை (பொங்கல்) நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.அதே வேளையில் புவனேசுவரி தேவியின் மகனாக சுவாமி விவேகானந்தர் பிறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்குச் சிவனின் அருளால் ஆண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ""நரேந்திரன்'' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்குப் பொருத்தமாகக் குழந்தைப் பருவத்தில் நரேந்திரன் துருதுருவென்று மிகவும் துடிப்பாக இருந்தார்.நரேந்திரன் தனது வீட்டில் அக்காள்மாரிடம் செய்யும் சேட்டைகளுக்கும், சுட்டித் தனங்களுக்கும் அளவே கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்களும், அவர்களது வீட்டைச் சுற்றி உள்ளவர்களும் நரேந்திரனைப் "பிலே' என்று செல்லமாக அழைத்தனர்."பிலே'வின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அவரது தந்தை விசுவநாத தத்தர் அவரைத் தனியாக கவனிப்பதற்குத் தாதிப் பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். 

அந்தப் பெண் பிலேயுக்குப் புராணக் கதைகளைக் கூறினாள். மேலும் தனது அம்மா பூஜைகள், பஜனைகள் செய்யும் போது பிலேவும் அதில் ஈடுபடத் தொடங்கினான். இவ்வாறு அவனை அறியாது ஆன்மிகத்தில் இறங்க ஆரம்பித்தான்.நரேந்திரனுக்கு முதலில் வீட்டில் வந்து ஒரு ஆசிரியர் பாடம் கற்பித்தார். இதன் பின்னர் வித்யாசாகரின் மெட்ரோ பாலிடன் பள்ளியில் படித்தான். நரேந்திரன் பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஒரு முறை கவனித்தால் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தான்.

நரேந்திரன் பள்ளிப் படிப்போடு குஸ்தி. உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், சிலம்பம் ஆகியவற்றையும் சேர்த்துப் படித்தான்.நரேந்திரன் 1880ம் ஆண்டு தனது 17ம் வயதில் பி.ஏ. படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். இங்கு படிக்கும்போது தான் அவர் பிரம்ம சமாஜ அங்கத்தினராகச் சேர்ந்தார். அந்தச் சமயம் பிரம்ம சமாஜத்தின் தலைவராக ஸ்ரீகேசவசந்திர சேனர் இருந்தார். அவர் தமது பத்திரிகையின் மூலம் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் புகழைப் பரப்பி வந்தார்.

அதே நேரத்தில் நரேந்திரன் கிரேக்க, ஜெர்மனிய, ஆங்கில, அறிஞர்களின் பல புத்தகங்களைக்கற்றார். இதன் விளைவாகக் கடவுளை நேரில் காண முடியுமா? என்ற சந்தேகம் மனதில் ஏற்படத் தொடங்கியது.இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கொல் கத்தாவில் உள்ள எல்லா மதப் பெரியவர்களிடமும் சென்று விளக்கம் கேட்டார். 

ஆனால் அவரின் கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.இந்த நிலையில் அவர் ஆழ்ந்த தியானங்களில் ஈடுபடத் தொடங்கினார். பிரம்ம சமாஜத்தின் ஒரு தலைவரான தேவேந்திரநாத் தாகூரை அணுகியும் அதேகேள்வியைக் கேட்டார். அவர் அதற்கு நரேந்திரனைக் கூர்ந்து நோக்கி""உனக்கு யோகியின் கண்கள் இருக்கின்றன. நீ ஆழ்ந்து தியானம் செய்தால் அதனுடைய பலனை விரைவில் அனுபவிப்பாய்'' என்று கூறினார். 

ஆனால் இந்த பதிலால் அவர் சமாதானம் அடையவில்லை.ஒரு நாள் நரேந்திரன் கல்லூரியில் ஆங்கிலப் பாட வகுப்பில் இருந்து கொண்டு இருந்தார். அவருக்குக் கல்லூரி முதல்வர் வில்லியம் வேட்ஸ் வொர்த்தின் கவிதையிலுள்ள "பரவச நிலை' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டால் பரவசநிலை என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தார்.

இதைக் கேட்ட நரேந்திரனுக்கு ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக ஏற்பட்டது.இந்த நிலையில் நரேந்திரன் வீட்டு அருகே உள்ள சுரேந்திர பாபுவின் வீட்டுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வந்தார். அங்கு நரேந்திரனைப் பாடுமாறு அந்த வீட்டுக்காரர் அழைத்தார். அவரும் சென்று""ஓ மனமே உனது சொந்த இடத்தை அடைவாயாக'' என்ற கருத்து அடங்கிய பாடலைத் தனது தேனிலும் இனிய குரலில் பாடினார். இதைக் கேட்ட ராமகிருஷ்ணர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.

இதன் பின்னர் ராமகிருஷ்ணர் நரேந்திரனிடம்""ஒரு முறை தட்சிணேசுவரம் வா'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு 1881&ம் ஆண்டு நரேந்திரனும் அங்கு சென்றார். அங்கு அவரை பக்திப் பாடல்களைப் பாடும்படி ராமகிருஷ்ணர் கூறினார். அதனை ஏற்று அவரும் பாடினார்.இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் நரேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் இவ்வளவு காலம் கழித்து வந்து இருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகத்தானே காத்து இருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா? என்றும் உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய் விட்டன என்றும் தேம்பித் தேம்பி அழுதபடி ராமகிருஷ்ணர் பேசி னார்.

இதைக் கேட்ட நரேந்திரன் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்.ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வந்த பின்னர் ராமகிருஷ்ணரின் ஆன்மிகப் பேச்சினையும், ஆனந்தப் பரவச நிலையையும் பார்த்து அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்தார்.

அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரின் தலைசிறந்த முக்கிய சீடர் ஆனார்.ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் 1885&ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டார். அவர் சமாதி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன் தனது சீடர் நரேந்திரனுக்குத் தனது சக்தி அனைத்தையும் வழங்கினார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகஸ்டு மாதம் 16&ம்நாள் அதிகாலை 1 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் நரேந்திரன் தனது சகோதர சீடர்களை ஒன்று கூட்டி வராக நகரின் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதன் பின்னர் அனைவரும் துறவறம் பூண்டுயாசகம் எடுத்து வாழத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல தொடங்கினார்கள்.

ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஞூயத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தனது அரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக்கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.

இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.இதனைத் தொடர்ந்து நரேந்திரன் பிருந்தாவனம், அயோத்யா, ஆக்ரா, இமயம், மீரட், ராமேசுவரம் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக பாரதத்தின் தென்கோடி எல்லையானகன்னியாகுமரியை 1892&ம் ஆண்டு வந்து அடைந்தார்.

அங்கு தேவியை வணங்கி வெளியே வந்த அவரது கண்ணுக்கு நடுக்கடலில் அமைந்து இருக்கும் பாறை ஒன்று தென்பட்டது. உடனே அந்தப் பாறைக்கு நீந்திச் சென்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.

அப்போதுதான் அவருக்கு பண்டைய பாரதப் பண்பாடு, இன்றைய வறுமை, தாழ்வு, மீண்டும் உலகின் முதல் நாடாக பாரதம் திகழப் போவதையும் உணர்ந்தார். அதில், தனது பணி என்ன என்பதை உணர்ந்தார்.இந்த நிலையில் கேத்ரி ராஜா தங்கள் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் முதல் பிறந்த நாள் விழாவில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும் என்று நரேந்திரனுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நரேந்திரன் தனது பெயரை சச்சிதானந்தா என்றும் விவிதிஷானந்தா என்றும் மாற்றிக் கொண்டு சென்றார்.

விழா முடிந்த பின்னர் கேத்ரி ராஜா அஜித்சிங் சச்சிதானந்தாவிடம் இனி தங்கள் பெயரை அடிக்கடி மாற்றி கொள்ள வேண்டாம் "விவேகானந்தர்' என்ற பெயரையே நிலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெயரைச் சூட்டினார்.விவேகானந்தர் 1893 ம் ஆண்டு மே 31&ந் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரான சிக்காகோவுக்குப் புறப்பட்டார். ஜ?ை மாதம் 31&ந் தேதி விவேகானந்தர் சிக்காகோவைச் சென்று அடைந்தார். 

விவேகானந்தர் அங்கு சென்ற உடன் சர்வ சமய மாநாட்டினைப் பற்றி விசாரித்தார். அதுசெப்டம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதையும் அதில் கலந்து கொள்வதற்கு ஏதாவது ஒரு மதத்தின் நற்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அவ்வளவு நாட்கள் அங்கு தங்குவதற்குக் கையில் பணமும் இல்லை. அவர்கள் கேட்கும் நற்சான்றிதழும் இல்லை. ஒரு சில நாட்களில் அவர் கையில் இருந்த பணம் கரைந்து போனது. இதனால் சாப்பிடுவதற்கு உணவுகூட இல்லாமல் சில நாட்களை நகர்த்தி வந்தார்.இதன் பின்னர் சிக்கா கோவில் இருந்து பாஸ்டனுக்குப் புறப்பட்டார். 

அங்கு அவருக்கு ரைட் என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் விவேகானந் தரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து உபசரித்தார். பின்னர் ஹார்வாட் பல்கலைக் கழகத்தின் கிரேக்க மொழிப் பேராசிரியர் ஜே.டபிள்யூ.ரைட் என்பவரிடம் விவேகானந்தரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் விவேகானந் தருக்குப் புனித நற்சான்றிதழ் கிடைக்கச் செய்தார்.இதனைத் தொடர்ந்து சிக்காகோ நகருக்கு விவேகானந்தர் புறப்பட்டு வந்தார்.சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்துக் காத்து இருந்த அந்த செப்டம்பர் 11&ந் தேதியும் வந்தது. சர்வ சமய மாநாடும் தொடங்கியது. 

உலகில் உள்ள எல்லா மதத்தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது மதத்தினைப் பற்றிப் பேசிச் சென்றனர். அன்றைய நாளின் கடைசி ஆளாக சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு அழைக்கப் பட்டார்.சுவாமி விவேகானந்தர் தனதுபேச்சினை ""அமெரிக்கசகோதர! சகோதரி களே'' என்று பேச ஆரம்பித்ததும் அங்கு கூடி இருந்த 6 ஆயிரம் மக்களின் இதயங்களை ஒரு நொடிப் பொழுதில் கொள்ளை கொண்டார். அவர் தொடர்ந்து தனது பேச்சில் எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம். சகிப்புத் தன்மையை உலகிற்குக் கூறிய மதம் இந்து மதம். நதிகள் அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. 

அதுபோல சமயங்கள் பலவாகத் தோன்றினாலும், அனைத்தும் கடவுளைத்தான் சென்று அடை கின்றனஎன்று பேசினார்.அந்த மாநாட்டைப் பற்றி அடுத்த நாள் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளின் முதல் பக்கத்தை சுவாமி விவேகானந்தர் அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.

அவரது பெருமையைக் கேட்ட மக்கள் மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் பேச்சைக் கேட்பதற்கு என்று வரத் தொடங்கினார்கள்.இதனால் மாநாட்டில் மற்ற மத போதகர்கள் பேச்சு அலுப்புத் தட்டும்போது சுவாமி விவேகானந்தரைப் பேச அழைத்தனர். இதனால் அவரது புகழ் நாடுதாண்டிப் பரவத் தொடங்கியது.

சுவாமி விவேகானந்தர் 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது சொற்பொழிவை முடித்துக் கொண்டு 1896&ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.3 ஆண்டு காலமாக ஓய்வு இன்றி உழைத்ததின் காரணமாக அவரது உடல் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. 1897ம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி ராமேசுவரம் வந்த அவரை நாடு முழுவதும் ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடி வாழ்த்தினார்கள்

Thursday, September 3, 2015

Must Visit Bird Sanctuaries For Avian Lovers

Peacock, the national bird of India is a visual treat to the bird lovers. When a peacock fans out its wings, its full grandeur is put on display with its magnificent iridescent plumage— spotted with deep blue, violet eyes. Peacock, Rose-ringed Parakeet, Asian Blue Quail White Eared-Pheasant, Bar-headed Goose, Tufted Duck, Little Grebe, Black-necked Stork, Coal Tit and many other are part of rich bio-diversity of bird life in India, a paradise for avian lovers.
Adding to it, with onset of winter, country starts to buzz with the chirping of winged guests, these include Kingfisher, Rosy, Pelican, Wood Sandpiper, Starling Bluethroat, Long billed Pipit birds 'Brahmini' Duck, Bar-Headed Geese and many more, altogether enthralling the bird watchers. If you want to savor the sight of these flying beauties, which substantiates Wordsworth’s quote, “A thing of beauty is joy forever,” these are the 5 must visit bird sanctuaries in India, as compiled by Business Insider.

மாற்றான் தோட்டத்து மல்லிகை - சுவாமி விவேகானந்தர்"

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்றார் அறிஞர் அண்ணா. உண்மையான ஆன்மீகவாதிகள் தன் மதம் தன்னை நெறிப்படுத்துவது போல் பிற மதங்கள் அம்மதத்தவரை நல்வழிப்படுத்தும் என்று நம்பினர்.ஆன்மீகவாதிகள் தங்கள் மதங்களைப் பற்றிச் சொல்வதில் வியப்பொன்றும் இல்லை. பிற மதங்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருந்தனர் என்று அலசி மதநல்லினக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த என்னால் இயன்ற சிறு முயற்சியாக ஒவ்வொரு மதம் பற்றி பிற மதத்தவர் கொண்டிருந்த கருத்துக்களை பகிந்து கொள்ளப் போகிறேன்.சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். தீவிர இந்துவாக இருந்தபோதிலும் பிற மதங்களை நேசித்தார்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் வருட உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் பாஸிஸ இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்."The HINDUS may get the credit of arriving at it earlier than other races, yetpractical Advaitism, Which looks upon and behaves to all mankind as one's ownsoul was never developed among the Hindus. ' Letters of Swami Vivekananda p 463''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்." என்றார் இந்த நல்லிணக்க பிதாமகன். மேலும்'On the other hand, my experience is that if ever anyreligion approached tothis equality in an appreciable manner, it is Islam and Islam alone, I am firmlypersuaded, therefore, that without the help of practical Islam, Theories ofVedantism, however fine and wonderful they may be, are entirely valueless to thevast mass of mankind.... "Letters of Swami Vivekananda p 463கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்துவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது" என்று கூறினார்.இந்து மதத்தின் ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.Swami Vivekananda on the issue (Collected works- Vol. VIII, page 330). SaysSwamiji Why amongst the poor of India so many are Mohhamedans? It is nonsense to say that they were converted by the sword, it was to gain liberty from Jamindars(Feudal lords) and priests. Islam, contrary to the popular belief came to Indiathrough the Arab traders who used to visit the Malabar coast for trade, and itwere the Hindu Kings who built the initial Mosques to sustain the trade. Alsothere are still communities in the coastal areas who practice mixed, Hindu andMuslim, rituals.கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள்கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல."இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்" இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்.''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்."என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன்புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போனபசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?" என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமிவிவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள்.இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை"" என்றார்கள்.வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான்இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது" என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!"" என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாதஇந்தியாவாகத் திகழும்."இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனவாக
இருந்தது ...

Wednesday, September 2, 2015

Green tea


Coffee's nutrient-laden cousin, green tea is fast becoming the go-to health infusion for all. When it comes to the ideal beverage, experts say that green tea is second only to water. Regular consumption of green tea is known to protect against various types of cancer, including those of skin, breast and lungs. Green tea relieves stress by keeping blood pressure in check. It also helps speed up the metabolic rate because of its antioxidant effects. Green tea is also known to boost immunity against diseases like influenza and flu.
Nutrients Vitamin C, Vitamin B, Antioxidants
Calories 2 per 100 millilitre
How best to drink Experts recommend drinking two to three cups a day after a meal.

Fenugreek


Fenugreek or methi has several health benefits for women. It increases milk production in lactating mothers, helps in elevating iron deficiency and eases menopausal symptoms. Fenugreek also makes for an excellent ingredient for home made face and hair masks and can be used to treat blackheads and blemishes and to cure hair fall and dandruff.
Nutrients Vitamins, Potassium, Iron
Calories 50 per 100 grammes
How best to eat Fenugreek leaves can be used as seasoning in curries while Fenugreek seeds can be used to prepare healthy herbal tea.

Tuesday, September 1, 2015

வியக்க வைக்கும் வியர்வையின் நன்மைகள்...?

வியர்வையால் மனிதனுக்கு சில நன்மைகளும் கிடைக்கின்றது. குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு அதிகம் வியர்க்கும். அதிகம் வியர்த்தால் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் பழகிகொள்ளலாம். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும்.
அதிகம் வியர்த்தால், எப்போதும் காற்றாடிக்கு அருகிலேயே உட்காராமல் சற்று வியர்க்கவும் வழிவிடலாம். வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.
உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகி, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிசெய்கிறது.
வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
உடற்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது
புத்துணர்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கலானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்கவும் உதவுகிறது

அர்ஜுனா. . ! அர்ஜுனா . . .!

நம் ஊரில் மழை பெய்யும்
போது இடி இடித்தால் போதும்.
அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள்
பெரியவர்கள்.
உடனே, நம்
வீட்டு இளசுகள்,
நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன்
வில்லையும் அம்பையும்
எடுத்துகிட்டு வந்து,
இடி சத்தமே இல்லாம பண்ணிட
போறானாக்கும்
என்று கேலி செய்வார்கள்.
இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வ
அதை பில்டிங் மேலே வைக்காம
இன்னமும்
அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே
என்று இடியிலிருந்து தப்பும்
அறிவியல் உபகரணம் பற்றியும்
எடுத்துச்
சொல்வார்கள்.
உண்மையில், உண்மையான
அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது,
சிலரது காது அடைத்து ஙொய்ங்
என்று சத்தம் வரும்.
இதிலிருந்து தப்ப
அர்ஜுனா என்றால் போதும்.
காது அடைக்காது. அர் என்று சொல்லும்
போது, நாக்கு மடிந்து மேல்
தாடையைத்
தொடும். ஜு என்னும் போது வாய்
குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும் போது, வாய் முழுமையாகத்
திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால்
காது அடைக்காது.
அதற்குத்தான்
அர்ஜுனா வை நம்மவர்கள்
துணைக்கு அழைத்தார்கள்.
அர்ஜுனன்
கிருஷ்ண பக்தன் என்பதால், அவன்
பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம்
என்ற ஆன்மிக காரணத்துடன்,
காது அடைத்து விடக்கூடாது என்ற
அறிவியல் காரணமும் இதில்
புதைந்து கிடக்கிறது
-தமிழன் வருவான்.
எங்கே சொல்லுங்க அர்ஜுனா ! அர்ஜுனா!